சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் உலகின் நீர்நிலைகளில் உள்ள கரைந்த ஒக்சிஜனின் அளவு வேகமாக குறைந்துவருவதாக தகவல் ...

 



அமெரிக்க ஆராய்ச்சியாளர்களால் சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் உலகின் நீர்நிலைகளில் உள்ள கரைந்த ஒக்சிஜனின் அளவு வேகமாக குறைந்துவருவதாக கண்டறியப்பட்டுள்ளது.


இதற்கு முக்கிய  காரணமாக காலநிலை மாற்றம் உள்ளதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.


கடல், நதி என பூமியின்  70  சதவீத பரப்பு நீரினால் ஆனதாகும். உலகில் உயிர்கள் வாழ்வதற்கு அத்தியாவசிய தேவையும் நீரே ஆகும். இந்த சூழலில் நீர் நிலைகளில் ஒக்சிஜன் வேகமாக குறைந்து வருவதால் நீரை சார்ந்துள்ள உயிர்க்கோலம் பெரும் ஆபத்தை எதிர்கொண்டுள்ளது. 

ஏனெனில் கரைந்த ஒக்சிஜன் ஆனது கடல் மற்றும் நன்னீர் பரப்பில் வாழும் உயிரினங்களுக்கு இன்றியமையாததாகும்.


எனவே, ஒக்சிஜன் குறைவால் கடல் உயிரிகள் அழிவது உணவுச் சங்கிலியில் பிளவை ஏற்படுத்தும். மேலும் உலகத்திற்கு தேவையான 70% ஒக்சிஜன் கடலிலிருந்து தான் உற்பத்தியாகிறது.  ஆகையால்  கடலில் ஒக்சிஜன் அளவு குறைவது மனிதர்களுக்கு ஆபத்தாக மாறும் என்று ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கின்றனர்.

Post a Comment

Previous Post Next Post

5

5

5

Girl in a jacket Girl in a jacket

5

5

HTML tutorial