சாந்தனின் பூதவுடல் உறவினரிடம் கையளிப்பு - முடிவுக்கு வந்த இழுபறி

 





கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு கொண்டுவரப்பட்ட சாந்தனின் பூதவுடலை விடுவிப்பதில் ஏற்பட்டிருந்த இழுபறி முடிவுக்கு வந்தது.

உரிய ஆவணங்கள் கையளிக்கப்பட்டு பூதவுடல் சாந்தனின் உறவினரிடம் கையளிக்கப்பட்டது.

கொழும்பில் உள்ள மலர்ச்சாலையொன்றுக்கு கொண்டுவரப்பட்டு உரிய ஏற்பாடுகள் செய்யப்பட்ட பின்னர் பூதவுடல் யாழ்ப்பாணத்துக்கு எடுத்துச் செல்லப்படும் என உறவினர் தெரிவித்தனர்.

சென்னையில் இருந்து கொழும்பு கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு கொண்டுவரப்பட்ட சாந்தனின் பூதவுடல் யாழ்ப்பாணம் கொண்டு செல்வதற்கு தாமதம் ஏற்படலாம் என சகோதரர் மதுசுதா, ஒருவன் செய்தி சேவைக்குத் தெரிவித்தார்.

உரிய ஆவணங்கள் தொடர்பாக கட்டுநாயக்கவில் குடிவரவு - குடியகழ்வு அதிகாரிகள் வினவுவதாகவும் இதனால் மேலும் பல மணிநேரம் தாமதிக்கலாம் என்றும் அவர் தெரிவித்தார்.

சாந்தனின் பூதவுடலுடன் வருகைதந்த சட்டத்தரணி புகழேந்தி, உரிய ஆவணங்களை சமர்ப்பிப்பதில் ஈடுபட்டுள்ளார். சாந்தனின் பெயர் தொடர்பிலேயே காலத்தாமதம் ஏற்படுவதாக தெரிய வருகிறது.

இந்தியாவில் மரணமடைந்த சாந்தனின் பூதவுடல் சென்னை விமான நிலையம் ஊடாக கொழும்பு கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தாக எமது விமான நிலைய செய்தியாளர் குறிப்பிட்டார்.

இதேவேளை, சாந்தனின் பூதவுடலை யாழ்ப்பாணத்திற்கு கொண்டு செல்வதற்கான ஏற்பாடுகள் இடம்பெற்றுவருதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


உலகின் தரமான தமிழ் வானொலி கேட்கவேண்டுமா தரமான பாடல்கள் சிறந்த அறிவிப்பாளர்களால் தொகுத்து வழங்கபடும் நிகழ்ச்சிகளை கேட்க இந்த லிங்கை  அழுந்துங்கள்

www.akswisstamilfm.com

www.akswisstamilfm.com 

Download

AKSWISSTAMILFM APPS android  


AKSWISSTAMILFM  APPS IPHONE

https://apps.apple.com/us/app/akswiss-tamil-fm/id1607446642?platform=iphone  👈👈


#akswisstamilfm #skiing  #akswisstamilmedia  #akswisstamiltv

உலக செய்திகள் சினிமா விளையாட்டு அரசியல் செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த ஆப்ஸை தரவிறக்கம் செய்யவும் 👉

Post a Comment

Previous Post Next Post

5

5

5

Girl in a jacket Girl in a jacket

5

5

HTML tutorial