வங்காள விரிகுடா வான் பகுதி தொடர்பில் இந்தியா விடுத்துள்ள விசேட அறிவிப்பு

வங்காள விரிகுடா வான் பகுதியில் எதிர்வரும் ஏப்ரல் 3ஆம் திகதி முதல் 4ஆம் திகதி வரை விமானப்பரப்புக்கு இந்தியா தடையை அறிவித்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்தியாவின் இந்த அறிவிப்பு வங்காள விரிகுடா பகுதியில் ஏவுகணைச் சோதனைகளை மையப்படுத்தி வெளியிடப்பட்டுள்ளது. ஏப்ரல் 3 முதல் 4 வரை ஏவுகணை சோதனை நடத்தப்படவுள்ள நிலையில் குறைந்தது நான்கு சீன ஆராய்ச்சிக் கப்பல்கள் இந்தியப் பெருங்கடலில் தற்போது நங்கூரமிட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. ஷியாங் ஜங் ஹொங் - 01 (Xiang Yang Hong 01), ஷியாங் ஜங் ஹொங் - 03 (Xiang Yang Hong 03), யுவான் வாங் 03, ஏவுகணை கண்காணிப்பு கப்பல் மற்றும் டா யாங் ஹாவ் என்பனவே குறித்த கப்பல்களாகும் இதனையடுத்து சீனாவின் உளவுக் கப்பல்களுக்கு அருகில் 'ஆர்வி சமுத்திர ரத்னாகர்' என்ற ஆராய்ச்சிக் கப்பலை இந்தியா நிலை நிறுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

Previous Post Next Post

5

5

5

Girl in a jacket Girl in a jacket

5

5

HTML tutorial